
நேற்றிரவு (30) ஜனாதிபதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு மேற்கொண்ட கலந்துரையாடலின் போது இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த கலந்துரையாடல் இடம்பெற்றது.
நாட்டிலுள்ள தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தை நேற்றிரவு ஜனாதிபதியுடன் முன்னெடுக்கப்பட்டதாக அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவுக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லையென்பதை ஜனாதிபதி ஏற்றுக் கொண்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அரசாங்கத்துக்கு எதிராக 4 முறை நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதியிடம் ஞாபகப்படுத்தியதாகவும் அக்கட்சி கூறியுள்ளது.
பாராளுமன்றத்தில் பெரும்பான்மைப் பலம் இல்லையென்று ஏற்றுக் கொண்டதன் பின்னர் அக்குழுக்கு அரசாங்கத்தை கொடுத்திருப்பது தவறானது என்பது சகல தரப்பினரதும் கருத்து முரண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட தீர்மானமாகும்.
Post a Comment