Ads (728x90)

இந்தோனேசியாவில் மேற்கு நுஷா தெங்கரா மாகாணத்தில் அமைந்துள்ள தீவு பகுதியான லம்போக் பிராந்தியதில் சக்திவாய்ந்த நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கம் 5.5 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும் , நிலநடுக்கம் காரணமாக ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் வௌியிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

நிலநடுக்கத்தில் அங்குள் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில் பொதுமக்கள் பீதியில் வீட்டை விட்டு வீதிகளுக்கு ஓடி வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நிலநடுக்கம் காரணமாக ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பில் இதுவரை தெரியவரவில்லை.

Post a Comment

Recent News

Recent Posts Widget