
இந்தக் கோரிக்கை குறித்து தற்போதுவரை பரிசீலனை இடம்பெறவில்லை என நுகர்வோர் அதிகார சபையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
இது குறித்து லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் கூறுகையில் ...
கடந்த ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் உலக சந்தையில் ஒரு மெற்றிக் தொன் சமையல் எரிவாயுவின் விலை 595 அமெரிக்க டொலரினால் அதிகரித்துள்ளதாக தெரிவித்தார்.
இதேநேரம், டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி பாரியளவில் வீழ்ச்சியடைவதும் இந்தக் கோரிக்கையை முன்வைப்பதற்கு காரணமாகும் என்றும் லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
வருடாந்தம், ஒவ்வொரு இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை, சமையல் எரிவாயு நிறுவனம், உலக சந்தையின் சமையல் எரிவாயு விலை நிலைவரம் குறித்து, நுகர்வோர் அதிகார சபைக்கு தெளிவுபடுத்த்படுகிறது.
இதற்கமைய, சமையல் எரிவாயுவின் விலையை அதிகரிக்க அல்லது குறைப்பதற்கு குறித்த நிறுவனத்தினால், நுகர்வோர் அதிகார சபையிடம் கோரிக்கை விடுக்கப்படுகிறது.
தற்போது 12.5 கிலோ நிறைகொண்ட வீட்டு சமையல் எரிவாயுவின் வலை ஆயிரத்து 733 ரூபாவும்.
இந்த நிலையில், அதனை 359 ரூபாவினால் அதிகரித்தால், 12.5 கிலோ நிறைகொண்ட சமையல் எரிவாயுவின் விலை 2 ஆயிரத்து 92 ரூபாவாக உயர்வடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment