Ads (728x90)

ஒருவர் வாகனம் ஓட்டுவதற்கான சாரதி அனுமதிப்பத்திரம் பெறுவதற்கு முன்னர் இன்னுமொரு தொழில்நுட்ப பரீட்சையொன்றுக்கு உட்படுத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக  தெருப் பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை அறிவித்துள்ளது.

அச்சபையின் தலைவர் டாக்டர் சிசிர கோதாகொட இதனைத் தெரிவித்துள்ளார்.

தொழில்நுட்ப உபகரணங்கள் மூலம் சாரதி அனுமதிப் பத்திரம் பெறும் பயிற்சியின் போது புள்ளிகள் வழங்கப்படவுள்ளது. ஏ.பீ.சீ. என்றவாறு புள்ளிகள் வழங்கப்படும். இந்தப் பரீட்சைக்கு முகம்கொடுக்கும் ஒருவர் குறைந்தது பீ. புள்ளியைப் பெற்றிருக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனுமதிப் பத்திரம் பெறுபவருக்கு தேவையான அடிப்படை அறிவையும் உளப் பலத்தையும்  வழங்குவது இந்தப் பரீட்சையின் நோக்கமாகும்.

இதற்கான தொழில்நுட்ப உபகரணங்களை இவ்வருடத்தில் முதலாவதாக இலங்கை போக்குவரத்துச் சபை சாரதி பயிற்சி நிலையங்களுக்கு வழங்கவுள்ளோம். பின்னர் நாடு முழுவதும் வழங்கப்பட்டு பரீட்சிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget