Ads (728x90)

பெருமளவிலான போதைப்பொருட்கள் கொள்ளுப்பிட்டியில் நேற்று இரவு பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது கைப்பற்றப்பட்டுள்ளது.

கொள்ளுப்பிட்டியில் கைப்பற்றிய (294.49kg ஹெரோயின்) போதைப்பொருட்களை போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு சென்று பார்வையிட்ட ஜனாதிபதி பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் விசேட அதிரடிப் படையினருக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.

இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை எதிர்கால சந்ததியினருக்கு ஆற்றிய உன்னத பணி என்று தெரிவித்த ஜனாதிபதி, இவ்வகையான செயற்பாடுகளுக்கு தனது பூரண ஆசீர்வாதமும், ஒத்துழைப்பும் எப்போதும் உண்டு என்றும் மேலும் தெரிவித்தார்.

கொள்ளுப்பிட்டி வாகன தரிப்பிடத்தில் இரு வேன்களில்  10 பயண பொதிகளில் 272பொதிகளாக பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget