Ads (728x90)

கொழும்புக்கும் மட்டக்களப்புக்கும் இடையிலான உள்ளுர் விமான சேவை நாளை வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இலங்கை சுற்றுலா கைத்தொழில் மன்றத்தின் தலைவர் ஏ.எம்.ஜௌபர் தெரிவித்தார்.

இவ்விமான சேவை திங்கள், புதன், வெள்ளி ஆகிய தினங்களில் நடை பெறவுள்ளன. இத்தினங்களில் தினமும் காலையில் 10 மணிக்கு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு மட்டக்களப்பு உள்ளுர் விமான நிலையத்தினை வந்தடையும்.

பின்னர் 11.30 மணிக்கு திருகோணமலைக்கு சென்று அங்கிருந்து மீண்டும் மட்டக்களப்புக்கு வந்து மாலை 3.30 மணிக்கு கொழும்பு பண்டார நாயக்க சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget