Ads (728x90)

சகல இன மாணவர்களும் கல்வி கற்கும் முன்மாதிரிப் பாடசாலைகளை உருவாக்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பணிப்புரை வழங்கியுள்ளதாக பாணந்துறை, அம்பலாந்துவையில் இடம்பெற்ற களுத்துறை மாவட்ட முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஆராயும் கூட்டத்தில் உரையாற்றுகையிலே மேல் மாகாண ஆளுநர் அஸாத் சாலி தெரிவித்துள்ளார்.

சகல சமயத்தவர்களும் கல்வி பயிலும் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை வழங்கியுள்ளார்.  திட்டமிட்ட முஸ்லிம் பாடசாலையை அமைக்கும் பாராளுமன்ற உறுப்பினர் முஜீபுர் ரஹ்மானின் பிரேரணையை ஜனாதிபதி நிராகரித்துள்ளார்.

எனவே நாம் மேல் மாகாணத்தில் முன்மாதிரிப் பாடசாலைகளை அமைக்க உள்ளோம். இங்கு சகல இனங்களையும் சேர்ந்த மாணவர்கள் ஒன்றாக கல்வி கற்பர். இதனால் புரிந்துணர்வு, இன ஐக்கியம் ஏற்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget