பாராளுமன்றத்தில் கடந்த நவம்பர் மாதம் இடம் பெற்ற தாக்குதல் தொடர்பாக இன்று நாடாளுமன்ற அமர்வில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இச்சம்பவம் பாராளுமன்றத்திற்குள் தான் இடம் பெற்றது. பாராளுமன்றத்தில் நடைபெற்ற ஒரு சம்பவத்தை வெளியில் உள்ள ஒரு திணைக்களத்தினால் விசாரணைக்கு உட்படுத்துவது என்னைப் பொறுத்தவரை முறையான ஒன்றாக தெரியவில்லை.
இதுதொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ள சபாநாயகராகிய உங்களுக்கு அதிகாரம் உள்ளது. தண்டனை கொடுக்கவும் உங்களுக்கு அதிகாரம் உள்ளது.
எனவே இச்சம்பவத்தை பொலிஸாரின் ஊடாக விசாரணைக்கு உட்படுத்துவது சரியானதாக அமையாது என்பதே எனது நிலைப்பாடு.
இவ்வாறான ஒரு சம்பவம் நாடாளுமன்றுக்கு வெளியில் இடம் பெற்றிருந்தால் நான் இந்த விடயத்தில் இதுபோன்றதொரு கருத்தை வெளியிட்டிருக்க மாட்டேன் எனவும் தெரிவித்துள்ளார்.
Post a Comment