இலங்கை அரசாங்கம் நீதி மற்றும் பொறுப்புக்கூறல்களை உறுதி செய்வதாக உறுதியளித்தது எனினும் உண்மை மற்றும் நல்லிணக்க பொறிமுறைக்கு மாத்திரம் அமைச்சரவையின் அனுமதியை பெற முயல்வதன் மூலம் பின்னோக்கி செல்ல முயல்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை குறித்து மனித உரிமை பேரவை விவாதிக்க உள்ள நிலையில் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நடைமுறைப்படுத்துவதில் இருந்து தப்புவதற்காக தாமதிக்கும் நாடகத்தை ஆடுகின்றது என நவநீதம் பிள்ளை கருத்து வெளியிட்டுள்ளார்
தென்னாபிரிக்காவின் மாதிரியை தவறாக அர்த்தப்படுத்துவதற்கான முயற்சிகள் இடம் பெறுகின்றன எனவும் குறிப்பிட்டுள்ள அவர் தென்னாபிரிக்கா உண்மையை தெரிவிப்பது விசாரணை இழப்பீடு என்பவற்றையும் உள்வாங்கியிருந்தது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் பின்பற்றப்பட்ட முறை என்பது பூரணமானது இல்லை எனினும் அங்கு நிலவிய அரசியல் சூழ்நிலைக்கு உகந்தது என்பதனால் ஏற்றுக்கொள்ளப்பட்டது எனவும் நவநீதம் பிள்ளை தெரிவித்துள்ளார்.
தென்னாபிரிக்காவில் காணப்பட்ட நிலைமையை இலங்கையில் இடம்பெற்ற விடயங்களுடன் ஒப்பிட முடியாது என தெரிவித்துள்ள நவநீதம் பிள்ளை இங்கு பாரிய படுகொலைகள், காணாமல் ஆக்கப்படுதல் உட்பட பல்வேறு அட்டுழியங்களை பொதுமக்கள் அனுபவித்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment