Ads (728x90)

வடமாகாணம் பூராகவும் நாளை காணாமல் ஆக்கப்பட்டோாின் உறவுகளுடைய ஒழுங்கமைப்பில் ஹா்த்தால் அனுட்டிக்கப்படவுள்ளது.

இந்தப் போராட்டத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் மக்கள் கூட்டணி, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜனநா யக மக்கள் முன்னணி, சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பு, யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் உள்ளிட்ட அமைப்புக்கள் தங்களது முழுமையான ஆதரவை வழங்கியுள்ளன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டத்துக்கு அன்று தொடக்கம் ஆதரவு வழங்கி வருகின்றது. அவர்களின் கோரிக்கைகள், நீதியானவை - நியாயமானவை. அந்த வகையில் வடக்கில் அவர்களால் முன்னெடுக்கப்படும் பூரண போராட்டத்துக்கு சகல தரப்புக்களும் ஒத்துழைக்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றோம் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.







Post a Comment

Recent News

Recent Posts Widget