Ads (728x90)

வடக்கில் அதிகரிக்கும் குற்றச் செயல்களை கட்டுப்படுத்த தமிழ் பொலிஸார் புதிதாக இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர் என்று யாழ். மாவட்டச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற மாவட்ட சிவில் பாதுகாப்பு குழுக் கூட்டத்தில் வடக்கு மாகாண சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் கணேசநாதன் தெரிவித்துள்ளார்.

வடக்கு மாகாணத்தில் புதிதாக 850 தமிழ் பொலிஸார்கள் இணைத்துக் கொள்ளப்படவுள்ளனர். 18 வயதுக்கு 28 வயதுக்கு இடைப்பட்ட 5 அடி 4 அங்குலம் உயரமுடைய இளைஞர், யுவதிகள் இணைய முன்வரவேண்டும் என அவர் மேலும் தெரிவித்தார்.

இலங்கையின் சனத்தொகை 2 கோடியே 30 இலட்சமாகும். இவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வெறுமனே 85 ஆயிரம் பொலிஸாரும், 10 ஆயிரம் விசேட அதிரடிப் படையினரும் உள்ளனர்.

இதனால் மேலதிக பொலிஸார் எமக்கு தேவையாக உள்ளார்கள். நாளை வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவனுடன் இணைந்து பொலிஸ்மா அதிபரை நான் சந்திக்க உள்ளேன். அவரிடம் இவ்விடயம் தொடர்பில் பேச உள்ளோம் என்றார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget