கிளிநொச்சி-பச்சிளைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட கரந்தாய் பிரதேச மக்கள் யுத்தம் காரணமாக 2006 ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து உறவினர்களின் வீடுகளில் வசித்து வந்தனர்.
இந்த மக்கள் குடியிருந்த நிலங்களை தமக்கு சொந்தமான நிலம் என தெரிவித்து தென்னை பயிர்செய்கை சபை இம்மக்கள் மீளக்குடியேறுவதைத் தடுத்தனர். இதனால் மக்கள் தமது காணிக்குள் செல்ல முடியாமல் உறவினர்களின் வீடுகளில் வசித்து வந்தனர்.
12 வருடங்களின் பின்னர் நேற்று தென்னை அபிவிருத்திச்சபை கையகப்படுத்திய காணிக்குள் உள்நுழைவு போராட்டம் நடத்திய மக்கள் அங்கு கொட்டகைகள் அமைத்து தங்கியுள்ளனர். இதன்போது பொலிஸாருக்கும் பாதிக்கப்பட்ட மக்களுக்கும் இடையில் அமைதியின்மை ஏற்பட்டது.
இம்மக்களிடம் 1976 ஆம் ஆண்டு காணி சீர்திருத்த ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட காணி அனுமதிப்பத்திரம் உள்ளதாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ். பிராந்திய ஆணையாளர் ரி.கனகராஜ் தெரிவித்தார்.
இந்த விடயம் தொடர்பான கலந்துரையாடல் தெங்கு செய்கை சபையின் அதிகாரிகளுடன் எதிர்வரும் சில தினங்களுக்குள் பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது. அதன் பின்னர் இறுதித் தீர்மானம் எடுக்கப்படவுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment