Ads (728x90)

இந்தியா மற்றும்  மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய உலகக்கோப்பை தொடரின் 34-வது லீக் ஆட்டம் மான்செஸ்டர் ஓல்டு டிராபோர்டில் நேற்று நடைபெற்றது. இப்போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணியை 125 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது.

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய  அணி முதலில் துடுப்பெடுத்தாடி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 268 ஓட்டங்களை பெற்றது.

269 என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த மேற்கிந்தியத்தீவுகள் அணி இந்திய அணியின் பந்து வீச்சுகளில் நிலைகுலைந்து 34.2 ஓவருக்குள் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 143 ஓட்டங்களை மாத்திரம் பெற்று 125 ஓட்டத்தினால் தோல்வியைத் தழுவியது.

இந்த தோல்வியின் மூலம் மேற்கிந்தியத்தீவுகள் எதிர்கொண்ட 7 போட்டியில் ஐந்தில் தோல்வியடைந்து மூன்றாவது அணியாக அரையிறுதிக்கு நுழையும் வாய்ப்பினை இழந்துள்ளது.


Post a Comment

Recent News

Recent Posts Widget