Ads (728x90)

எங்களுடைய கோரிக்கைக்குத் தீர்வு கிடைக்கவில்லையாயின் இன்று பிற்பகல் 2 மணிக்கு உலகமே வியக்கும் வியப்பான செய்தியைத் தருவோம் என கல்முனை வடக்கு பிரதேச செயலக தரமுயர்வைக் குறிக்கோளாகக் கொண்டு உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கிழக்கிலங்கை இந்து குருமார்கள் ஒன்றியத் தலைவர் ஸ்ரீ.க.கு.சச்சிதானந்தம் சிவம் குருக்கள் எச்சரித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தை தரமுயர்த்தி தரவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை காலை முதல் பிரதேச செயலகத்தின் எதிரில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் கல்முனை சுபத்திராம விகாரையின் விகாராதிபதி சங்கைக்குரிய ரண்முத்துக்கல சங்கரத்ன தேரர், கிழக்கிலங்கை இந்துகுருமார் ஒன்றியத்தின் தலைவர் ஸ்ரீ ஸ்ரீ க.கு.சச்சிதானந்தம் சிவம் குரு, ஹிந்து மத பூசகர்கள், தேவாலய பாதிரியார்கள், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான சா.சந்திரசேகரம் ராஜன் மற்றும் அழகக்கோன் விஜயரத்னம் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget