கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார்.
இது தொடர்பான வாக்குறுதிகள் பலமுறை பிரதமரால் வழங்கப்பட்டுள்ள நிலையில் மாவை சேனாதிராசா மற்றும் ஞா.சிறிநேசன் ஆகிய இருவரிடமும் நேற்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடந்த சந்திப்பின்போது இந்த வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் செவ்வாய்க்கிழமையோ, அல்லது அதற்கடுத்த செவ்வாய்க்கிழமையோ அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாக பிரதமர் வாக்குறுதியளித்துள்ளார்.
கடந்த சில மாதங்களின் முன்னரும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க ரணில் தயாரானபோது, அப்போது முஸ்லிம் காங்கிரஸ் எம்.பி ஹரீஸின் எதிர்ப்பு காரணமாக, முஸ்லிம் காங்கிரஸ் அதை எதிர்த்தது. இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லாத நிலையில், அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment