Ads (728x90)

அரசாங்கத்தில் அமைச்சர் பதவிகளை வகிக்கும் அனைத்து முஸ்லிம் அமைச்சர்களும் பதவி துறந்தனர். அலரி மாளிகையில் நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பின்போதே மேற்படி அறிவிப்பை அமைச்சர் ரவூப் ஹக்கீம் வெளியிட்டுள்ளார்.

முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தி ஒரு மாதத்தில் தீர்வு காணப்பட வேண்டுமென்றும் தெரிவித்தார்.

நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணி அரசில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிசாட் பதியுதீன், எம்.எச்.ஏ.ஹலீம், கபீர் ஹாசீம் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் எச்.எம்.எம். ஹரீஸ், அலிசாஹீர் மௌலானா, பைசல் காசீம், அமீர் அலி, பிரதியமைச்சர் அப்துல்லா மஹரூப் ஆகியோர் பதவி துறந்தனர்.

அமைச்சு பதவியை துறந்து நாடாளுமன்றத்தின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர்களாகச் செயற்படத் தீர்மானித்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.


Post a Comment

Recent News

Recent Posts Widget