வடக்கு, கிழக்கு பட்டதாரிகளை ஏனைய பிரதேசத்திலுள்ளவர்களுடன் ஒப்பிடாது விசேட கவனம் செலுத்தி நியமனங்களை வழங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் திருகோணமலை இந்துக் கலாசார மண்டபத்தில் வியாழக்கிழமை மாலை நடைபெற்ற நீண்ட காலம் தொண்டராசிரியர்களாகப் பணியாற்றியவர்களுக்கு ஆசிரியர் நியமனம் வழங்கும் நிகழ்வில் உரையாற்றும் போது இவ்வாறு வேண்டுகோள் விடுத்தார்.
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் யுத்தம் காரணமாக பாதிக்கப்பட்டிருக்கின்ற வகையில் விகிதாசாரத்திலோ விசேட கவனம் செலுத்தி நியமனங்களை வழங்க வேண்டும்.
கிழக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் போராடிய தொண்டராசிரியர்கள் 811பேரில் 739 பேரும், வட மாகாணத்தில் 350 தொண்டராசிரியர்களும் நியமனம் பெற்றிருக்கிறார்கள்.
எதிர்வரும் காலங்களில் பிரதமர் செயலகத்தின் ஊடாக தேசிய கொள்கை அமைச்சின் ஊடாக 7500 நியமனங்களை வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியிருக்கிறது. அந்த அமைச்சரவைப் பத்திரத்தில் வடக்குக் கிழக்கு, மலையகத்தில் இருக்கின்ற இளைஞர், யுவதிகளை விகிதாசாரத்திலோ அல்லது எண்ணிக்கையிலோ கூடுதலான வேலைவாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையினை பிரதமரின் கவனத்திற்குக் கொண்ட வரவிரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment