Ads (728x90)

12 ஆவது ஐ.சி.சி. உலகக் கிண்ணத் தொடரின் 8 ஆவது லீக் போட்டி நேற்று மாலை 3.00 மணிக்கு தென்னாபிரிக்கா மற்றும் இந்திய அணிகளுக்கிடையே சவுத்தம்டனில் ஆரம்பமானது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களுக்கு 9 விக்கெட்டுக்களை இழந்து 227 ஓட்டங்களை பெற்றது.

228 ஓட்டம் என்ற வெற்றியிலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட ஆரம்பித்த இந்திய அணி 47.3 ஓவர்களில் நான்கு விக்கெட்டுக்களை இழந்த நிலையில் தென்னாபிரிக்க அணி நிர்ணயித்த வெற்றியிலக்கை அடைந்தது.

இந்திய அணி சார்பில் தவான் 8 ஓட்டத்துடனும், விராட் கோலி 18 ஓட்டத்துடனும், ராகுல் 26 ஓட்டத்துடனும், தோனி 34 ஓட்டத்துடனும் ஆட்டமிழந்ததுடன், பாண்டியா 15 ஓட்டத்துடனும் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்கிய ரோகித் சர்மா மொத்தமாக 144 பந்துகளில் 13 நான்கு ஓட்டம், 2 ஆறு ஓட்டம் அடங்களாக 122 ஓட்டத்துடனும் ஆட்டமிழக்காதிருந்தனர்.

பந்து வீச்சில் தென்னாபிரிக்க அணிசார்பில் ரபடா 2 விக்கெட்டுக்களையும், ஆண்டில் பெஹல்குவே மற்றும் கிறிஸ் மொறிஸ் தலா ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்

Post a Comment

Recent News

Recent Posts Widget