2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டிலுள்ள அனைவரது வீட்டுத் தேவைகளுக்கும் தீர்வை பெற்றுத்தருவேன் என்று அம்பாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று முன்தினம் இடம் பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
வீடமைப்புப் பணிகள் ஒரே அமைச்சின் கீழ்தான் முன்னெடுக்கப்பட வேண்டும். பகுதி பகுதிகளாக பிரித்து வெவ்வேறு அமைச்சின் கீழ் வீடமைப்புப் பணிகள் கையளிக்கப்பட்டுள்ளதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகுவார்கள்.
தனிப்பட்ட ஆசைகளை பூர்த்தி செய்யும் நோக்கில் வீடமைப்புப் பணிகளை ஆறு அமைச்சின் கீழ் பிரித்துக் கொடுத்துள்ளனர். தெற்கில் உள்ளவர்கள் வேறு திசைக்கும், வடக்கில் உள்ளவர்கள் வேறு திசைக்கும் வீடுகளை பெற்றுக் கொள்ள செல்ல வேண்டியுள்ளது. அனர்த்தம் ஏற்பட்டால் மற்றுமொரு திசையை நோக்கி ஓட வேண்டியுள்ளது.
வீடமைப்புப் பணிகள் ஆறு பகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தாலும் 2020- 2025ஆம் ஆண்டு காலப்பகுதியில் நாட்டில் வீட்டுத் தேவையுடைய அனைவருக்கும் வீடுகளைப் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment