Ads (728x90)

கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சை மற்றும் ஐந்தாம் ஆண்டுக்கான புலமை பரிசில் பரீட்சை என்பன ஆரம்பமாகவுள்ளதை தொடர்ந்து 31-07-2019 திகதி நள்ளிரவு முதல்  தனியார் வகுப்புக்களை நடத்துவது தடை செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் சனத் பூஜித தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி கல்விப் பொதுத் தராதர பத்திர உயர்தரப் பரீட்சைகள் ஆரம்பமாகவுள்ளன. அத்தோடு ஆகஸ்ட் 4 ஆம் திகதி ஐந்தாம் தர மாணவர்களுக்கான புலமை பரிசில் பரீட்சை இடம்பெறவுள்ளது. இந்த பரீட்சைகளை நடத்துவதற்காக சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே நாளை முதல் தனியார் வகுப்புக்கள் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இம்முறை க.பொ.த உயர்த தர பரீட்சை ஆகஸ்ட் மாதம் 5 ஆம் முதல் 31 அம் திகதி வரை நடத்துவதற்கு இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அனைத்து நடவடிக்கைகளையும் முன்னெடுத்துள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget