Ads (728x90)

உலக புகழ்பெற்ற ஓவியரான லியனார்டோ டாவின்சி 500 ஆண்டுகளுக்கு முன் வரைந்த இயேசுவின் ஓவியம் 450 மில்லியன் டொலர்களுக்கு ஏலத்தில் விற்பனை செய்யப்பட்டு உலக சாதனை படைத்துள்ளது.

அமெரிக்காவில் நடைபெறும் ஓவியக் கண்காட்சியில் வைக்கப்பட்ட இந்த ஓவியம் ஏலம் விடப்பட்ட 19 நிமிடங்களிலேயே 450.3 மில்லியன் டொலர்களுக்கு விற்பனை செய்யப்பட்டு அதிகப் பணத்திற்கு விற்பனையான ஓவியம் என்ற சாதனையைப் படைத்துள்ளது.

‘சல்வடோர் முந்தி’ என்று பெயரிடப்பட்ட இந்த ஓவியம் இயேசுவின் பாதி உருவத்தைக் கொண்டுள்ளது.

இதற்கு முன் 2015 ம் ஆண்டு 179.4 மில்லியன் டொலர்களுக்கு விற்கப்பட்ட பிகாசோவின் ‘த வுமன் ஆஃப் அல்ஜேரிஸ்’ ஓவியத்தின் சாதனையை முறியடித்து இந்த ஓவியம் உலக சாதனை படைத்துள்ளது.

டா வின்சியின் ஓவியத்தில் இயேசு கையில் கிரிஸ்டல் பந்தை வைத்துள்ளார். மறு கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்வது போல் உள்ளது. ஓவியத்தைப் பார்க்க ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் வந்திருந்தனர். இந்த ஓவியம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.


Post a Comment

Recent News

Recent Posts Widget