Ads (728x90)

முல்லைத்தீவு  சப்த கன்னிமார் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த அறநெறிப் பாடசாலையினைத் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட அமைச்சர் சஜித் பிரேமதாச இருவருக்கு  அரச வேலை வாய்ப்பை வழங்குவதற்குரிய  நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார் .

குறித்த நிகழ்வில் அமைச்சர் சஜித் பிரேமதாசவினை ஓவியமாக  வரைந்து அமைச்சரிடம் கையளித்த  முல்லைத்தீவு குமுளமுனை கிராமத்தை சேர்ந்த பாலகாந்தன் பிரசன்னா  என்ற இளைஞனின்  திறமையை பாராட்டியதோடு, தேசிய வீடமைப்பு அதிகாரசபையில் வேலை வாய்ப்பை வழங்குமாறும், மேலும்  குறித்த சப்த அறநெறிப் பாடசாலையில் கல்வி கற்பிக்கும் பட்டதாரி யுவதி ஒருவருக்கும் அரச வேலை வாய்ப்பினை வழங்க நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சர் சஜித் பிரேமதாச அதிகாரிகளை பணித்துள்ளார் .

Post a Comment

Recent News

Recent Posts Widget