Ads (728x90)

அனைத்து அரசாங்க ஊழியர்களின் அடிப்படை சம்பளமும் 2020 ஜனவரி முதலாம் திகதியிருந்து 2500 ரூபாயிலிருந்து 10277 ரூபா வரை அதிகரிக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்கிரமரத்ன தெரிவித்தார்.

ஐந்து கட்டங்களாக சம்பள உயர்வை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. சம்பள முரண்பாட்டை தீர்க்க ஜனாதிபதியினால் விசேட சம்பள மீளாய்வு ஆணைக்குழுவொன்று நியமிக்கப்பட்டது. அதன் பரிந்துரை அடிப்படையிலான அறிக்கை அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் முடிவு வரும் வரை அரச ஊழியர்களுக்கு 2,000 ரூபா இடைக்கால கொடுப்பனவு வழங்கப்பட்டுள்ளது. 2017 ஆம் ஆண்டுக்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களின் கொடுப்பனவையும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget