கொழும்பு நகரில் ஏற்பட்டுள்ள வாகன நெரிசலை கட்டுப்படுத்துவதற்காக இன்று முதல் கொம்பனித்தெருவிலிருந்து கொழும்பு கோட்டை வரை உள்ள பேரே வாவியில் பயணிகள் படகு சேவை முன்னெடுக்கப்படவுள்ளது.
கொழும்பு வாழ் மக்களின் நன்மை கருதி இன்று முதல் வாவியில் படகு சேவை ஆரம்பிக்கப்படவுள்ளதாக அமைச்சர் பாட்டலி சம்பிக்க தெரிவித்துள்ளார். அடுத்த கட்டமாக கொழும்பு நகரிலுள்ள அனைத்து வாவிகள் ஊடாகவும் படகு சேவையை ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
கொழும்பு கோட்டையில் இருந்து கொம்பனித்தெரு வரை பேருந்தில் பயணிக்கும் போது 30 நிமிடங்கள் செலவிடப்படுகின்றது. எனினும் படகு சேவையில் 9 – 10 நிமிடங்களுக்குள் பயணித்துவிட முடியும். முதல் மாதம் இலவசமாக படகு சேவை பெற்றுக்கொள்வதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சேவையின் மூலம் கொழும்பு வாழ் மக்களுக்கு போக்குவரத்து நெரிசல் குறைந்த பயணம் அமையவுள்ளதுடன், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் நடவடிக்கையாகவும் இது அமையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment