மேலும் புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடையும் மாணவர்களுக்கான கொடுப்பனவுகளை மாணவர்களுக்கு சிரமம் இல்லாது குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் கிடைக்கக்கூடிய வகையில் கொடுப்பனவுகள் மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்புச் செய்யப்படவுள்ளது. இதற்கான தொழில்நுட்ப உதவியைப் பெற்றுக்கொள்ளுமாறும் கல்வி அமைச்சர் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதேபோன்று தரம் 13 வரையிலான கட்டாயக் கல்விசெயற்பாட்டின் கீழ் தொழில்நுட்ப கல்வியைத் தொடரும் மாணவர்களுக்கான கொடுப்பனவை வழங்குவதற்கும் இதன் மூலம் ஒழுங்குகள் மேற்கொள்ளப்படவுள்ளன என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
வருடந்தோறும் புலமைப்பரிசில் பரீட்சைக்கு சுமார் 350,000 மாணவர்கள் தோற்றி வருகின்றனர். இவர்களுள் புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தி எய்திய குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்த 15,000 மாணவர்களுக்கு வருடாந்தம் புலமைப்பரிசில் கொடுப்பனவு வழங்கப்பட்டு வருகின்றது.
Post a Comment