மக்கள் விடுதலை முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக காலிமுகத்திடலில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் அறிவிக்கப்பட்டார்.
ஜனாதிபதி தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணி தனித்து களமிறங்குவதாக அறிவித்திருந்த நிலையில் மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையில் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள், விவசாய அமைப்புகள், இளைஞர் அணியினர், பெண்கள் நலன் அமைப்பு, சுகாதார சேவையர் சங்கம் உள்ளிட்ட பல சங்கங்கள் ஒன்றிணைந்த தேசிய மக்கள் சக்தியின் மாநாடு கொழும்பு காலிமுகத்திடலில் நேற்று நடைபெற்றது.
தமது ஜனாதிபதி வேட்பாளருக்கு ஆதரவு வழங்கும் விதத்தில் இலங்கையில் சகல பிரதேசங்களில் இருந்தும் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கானோர் நேற்று காலிமுகத்திடலில் கலந்து கொண்டனர். இதன்போது தேசிய மக்கள் சக்கிதியின் கொள்கைத்திட்டமும் வாசிக்கப்பட்டது.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment