
இந்த வாரம் நடந்த லக்ஸுரி பட்ஜெட் டாஸ்கில் சிறப்பாக விளையாடியவர்களாக சேரன், சாண்டி, லாஸ்லியா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இதைத் தொடர்ந்து வழக்கம் போல் சிறப்பாக விளையாடியவர்கள் தலைவர் பொறுப்புக்கு நாமினேட் செய்யப்பட்டனர். இதற்கான தலைவர் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஹவுஸ்மேட்ஸின் அதிக ஆதரவை பெற்று சேரன் வெற்றிப் பெற்றார்.
அப்போ கவினை புடிக்கும், இப்போ ரொம்ப ரொம்ப புடிக்கும் – சேரனிடம் உண்மையை உடைத்த லாஸ்லியா.
பின்னர் வழக்கம் போல பிக் பாஸ் வீட்டு எண்ட்ரி டோர் வாசலில் கவினும் லாஸ்லியாவும் பேசிக்கொண்டிருந்தனர். லாஸ்லியாவின் தனிப்பட்ட விஷயங்களை கேட்டுக் கொண்டிருந்த கவின், அவற்றுக்கு ’உம்’ கொட்டினார்.
தர்ஷனுக்கும் முகெனுக்கும் முட்டிக் கொண்டது. ஷெரீன் விளையாட்டுக்கு எதுவோ சொல்லப் போக, அதற்கு தர்ஷன் கோபமாக பேசிவிட, இதனால் வருத்தமடைந்தார் ஷெரீன். இதிலும் நாட்டாமை செய்ய வந்தார் வனிதா. ஷெரீனுக்கு ஆறுதல் கூறுகிறேன் பேர்வழி என்ற போர்வையில், தர்ஷன் மீது பகையை வளர்த்தார். இதிலிருந்து மீண்டு வருவேன் என ஷெரீன் கூற, அந்த பிரச்னை முடிந்ததாக தெரிகிறது.
பின்னர் அடுத்தடுத்து பிக் பாஸ் வீட்டில் டாஸ்குகள் நடைபெற்றன. இதில் முதல் போட்டியில் முகென் வெற்றி பெற்றார். இரண்டாவது போட்டியில் வனிதா வெற்றி பெற, மூன்றாவது போட்டியில் லாஸ்லியா வெற்றி பெற்றார். நான்காவது போட்டி சமனில் முடிந்தது.
இரண்டு குழுக்களாக பிரிந்து அடுத்தப் போட்டி நடந்தது. இந்த தொடர் வரிசை டாஸ்குகளில் டீம் பி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அவர்களுக்கு பிக் பாஸ் சாக்லேட் வழங்கினார். அதை வீட்டில் உள்ள அனைவரும் பகிர்ந்து உண்டனர்.
லாஸ்லியா செய்த குறும்புகளை கண்டிக்கும் விதமாக, கவின் செய்த விஷயங்கள், சக போட்டியாளர்கள் சாண்டி, சேரனுக்கு எரிச்சலாக இருந்தது. சிரிப்புடன் அவர்கள் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தினர்.
பின்னர் நடந்த டாஸ்க்கில் வனிதா தலைமையில் ஒரு அணியும், சாண்டி தலைமையில் ஒரு அணியும் மோதின. இதில் சாண்டி தலைமையிலான அணி வெற்றி பெற்றதையடுத்து, தங்களுடைய தோல்விக்கு கஸ்தூரி தான் காரணம் என வனிதாவும் கவினும் வழக்கம் போல குற்றம் சாட்டினர். ஷெரீன் மற்றும் தர்ஷன் இடையே எழுந்த வாக்குவாதம் குறித்து, எல்லா போட்டியாளர்களும் பேசிக் கொண்டிருந்தனர். ஷெரீனை சேரனும், தர்ஷனை கவின், சாண்டி உள்ளிட்டோரும் சமாதானப்படுத்தினர்.
Post a Comment