Ads (728x90)

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு மூன்று பிரதான கட்சிகளின் தலைமையிலும் புதிய கூட்டணிகள் உருவாகவுள்ளன. இந்த மாத இறுதிக்குள் ஐக்கிய தேசிய கட்சி தலைமையிலான புதிய கூட்டணி அறிவிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். 

நேற்று முன்தினம் கொழும்பு சுகததாச உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்ற கட்டுமானத் துறையில் பணிபுரியும் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வில்  பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டுமானால் எமக்கு சர்வாதிகாரம் வேண்டும் என்று ஒருசிலர் கூறுகிறார்கள். நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு சர்வாதிகாரம் ஒருபோதும் தேவையில்லை. அதற்கு எமக்கு ஜனநாயகமும், ஒழுங்குமுறைகளுமே அவசியம். இவை இரண்டினூடாகவே முன்னேற்றப்பாதையில் செல்ல முடியும் என்றும் அவர் கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget