Ads (728x90)

நாட்டில் எதிர்வரும் சில தினங்களுக்கு பலத்த காற்று மற்றும் அடை மழையுடனான சீரற்ற காலநிலை நீடிக்கும் என்று இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்தோடு யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, மன்னார், திருகோணமலை, புத்தளம், குருணாகல், அநுராதபுரம் மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் காற்றின் வேகமானது மணித்தி யாலத்திற்கு 50 - 55 கிலோ மீற்றரை விட அதிகரிக்கும் என்று சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும்.

மேற்கு, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லி மீற்றருக்கும் மேற்பட்ட மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும். மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மன்னார், யாழ்ப்பாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் அடிக்கடி மழை பெய்யக் கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

நாட்டில் நிலவும் தொடர்ச்சியான காற்று மற்றும் மழையுடன் கூடிய காலநிலை காரணமாக மக்களை அவதானமாக செயற்படுமாறு அந்த திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget