Ads (728x90)

உயிர்த்த ஞாயிறு தாக்குதலிற்கு பின்னர் அமுலுக்கு வந்த அவசரகால சட்டத்தினை கைவிடுவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார் என ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

ஜனாதிபதி அவசரகால சட்டத்தினை மேலும் நீடிப்பதில்லை என தீர்மானித்துள்ளார் என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி செயலகம் வியாழக்கிழமையுடன்  அவசரகால சட்டம் முடிவிற்கு கொண்டு வந்துள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளன.

ஏப்ரல் 21 ம் திகதிக்கு பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்தி ஒவ்வொரு மாதம் 22 திகதியும் அவசரகால சட்டத்தினை நீடித்து வந்த நிலையில் நேற்றுடன் அவசரகால சட்டம் முடிவுக்கு வந்துள்ளது.

இதேவேளை இலங்கையில் சுமூகநிலை ஏற்பட்டுவிட்டது என்ற செய்தியை சுற்றுலாப்பயணிகளிற்கு தெரிவிப்பதற்காக அவசரகாலநிலையை நீக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் ஜோன் அமரதுங்க இந்த வாரம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget