Ads (728x90)

கொழும்பு நகரில் நிலவும் வாகன நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் முதற் கட்டமாக கொம்பனித்தெருவிலிருந்து கொழும்பு கோட்டை வரை பேர வாவி படகுச் சேவை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு நகரில் தொடர்ச்சியாக இடம்பெறும் வாகன நெரிசல்களுக்கு தீர்வு காணும் வகையில் நகர் புறங்களிலுள்ள வாவிகள் மூலம் பயணிகள் போக்குவரத்து படகுச் சேவையை நடைமுறைப்படுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு அதற்கான முதற் செயற்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த பேர வாவி படகுச் சேவை அங்குரார்ப்பண நிகழ்வில் அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரனவக்க, சாகல ரத்நாயக்க, பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌசி, கடற்படை தளபதி அத்மிரால் பியல் டி சில்வா உள்ளடங்கலான அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் பலரும் கலந்துக்கொண்டார்கள்.

பெருநகர அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்கவின் வழிகாட்டலின் கீழ் இந்த திட்டம் செயற்படுத்தப்படுவதுடன் அந்த அமைச்சின் கீழ் இயங்கும் காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்த படகுச்சேவையை நடத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





Post a Comment

Recent News

Recent Posts Widget