Ads (728x90)

60 வயதுக்கு மேற்பட்ட சிரேஷ்ட கலைஞர்களுக்கு மாதாந்தம் ரூபா 5000 வீதம் வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஆரம்ப கைத்தொழில் மற்றும் சமூக ஊக்குவிப்பு அமைச்சர் தயா கமகே தெரிவித்துள்ளார்.

இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 200 சிரேஷ்ட கலைஞர்களுக்கு கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் கூறினார்.அரசாங்கத்தினால் கலைஞர்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 94 மில்லியன் ரூபாவுக்கு கிடைக்கும் வட்டியின் மூலம் இந்த கொடுப்பனவை வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

கலாச்சார அமைச்சு மற்றும் சமூக பாதுகாப்பு சபையின் மூலம் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுவதுடன் சமூக பாதுகாப்பு சபையினால் நடத்தப்படுகின்றது.

Post a Comment

Recent News

Recent Posts Widget