இரணைமடுக் குளத்தில் இருந்து தண்ணீரை யாழ்ப்பாணத்திற்கு கொண்டு வருவதற்கு சில தமிழ் அரசியல்வாதிகளிற்கு விருப்பமில்லை. ஆனால் அவர்கள் இங்கு இல்லை என மத்திய மீன்பிடி அமைச்சர் ஹரீசன் யாழில் வைத்து தெரிவித்தார்.
பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள மீன்பிடித் துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் இடம்பெற்றது. இதில் விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சரித்திர முக்கியத்துவம் வாய்ந்ததாக இந்த மீன்பிடி துறைமுகம் அமையவுள்ளது. இங்கு 300 படகுகளை உள்வாங்கக் கூடியதாக இருக்கிறது.
வடமராட்சி களப்பு நிர்மாண வேலை நடைபெறவுள்ளது. அந்த களப்பு நிர்மாணிக்கப்பட்டதும் அது நீர் தேசிய வடிகாலமைப்புச் சபையினரிடம் ஒப்படைக்கப்படும். இதனூடாக வடக்கு மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். இரணைமடு தண்ணீர் வடக்குக்கு திரும்பினால் குடிநீர் பிரச்சினை தீர்ந்திருக்கும். ஆனால் இரணை மடு தண்ணீரை யாழிற்கு கொண்டுவர சில தமிழ் அரசியல்வாதிகளிற்கு விருப்பமில்லை.
வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள சுமார் 2000 - 3000 ஏக்கர் காணிகளை விடுவிப்பதற்கு எதிர்வரும் ஓரிரு மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பருத்தித்துறையில் அமைக்கப்படவுள்ள மீன்பிடி துறைமுகத்திற்கான அடிக்கல் நாட்டு விழா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்நகழ்வில் சுமந்திரன், மாவை சேனாதிராசா, சித்தார்த்தன் ஆகிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment