தாலி என்பது ஒரு புனித நூல். இதை ஒரு குறிப்பிட்ட முறையில் உருவாக்க வேண்டும். அது மட்டுமல்ல ஒவ்வொரு வருடமும் அந்த தாலியைப் புதுப்பிக்க வேண்டும். தற்சமயம் அந்த நடைமுறை வழக்கத்தில் இல்லை.
தாலி என்ற பெயரில் தடிமனான தங்கச் சங்கிலி போடப்படுகிறது. நூலில் தான் தாலி இருக்க வேண்டும். அதுவும் குறிப்பிட்ட முறையிலான பருத்தி நூலாகவோ அல்லது பட்டு நூலாகவோ இருக்க வேண்டும். இந்த நூல் சம்பந்தப்பட்ட இருவரின் சக்தி நிலைகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது.
அதாவது ஆணின் குறிப்பிட்ட ஒரு நாடியையும் பெண்ணின் ஒரு குறிப்பிட்ட நாடியையும் அந்த புனித நூல் இணைக்கிறது. இப்படித்தான் முற்காலத்தில் விவாகங்கள் நடத்தப்பட்டன. அதில் நீங்கள் ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த உறுதியான பிணைப்பு கணவன் – மனைவி இருவருக்கும் ஒரு அபரிமிதமான சக்தியைக் கொடுத்தது.
அந்த சக்தி சமநிலையுடன் இருந்ததால் தங்கள் வாழ்க்கையில் என்ன செய்ய நினைக்கிறார்களோ, அதை எந்த மனச் சிதறலும் இல்லாமல் அவர்களால் செய்ய முடிந்தது. இவர் தன்னை விட்டுப் பிரிந்து விடுவாரோ என்பது போன்ற பாதுகாப்பற்ற தன்மையால் அவர்கள் பாதிக்கப்படவில்லை. அந்த அளவிற்கு அவர்களிடம் உறுதியான பிணைப்பு இருந்தது. ஆனால் தற்போது மங்கள சூத்திரம் என்பது வெறும் சடங்காகி விட்டது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment