இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு செய்யப்பட்டுள்ளதாக நிதியமைச்சு அறிவித்துள்ளது.
அந்த வகையில் ஒக்டேன் 92 ரக பெற்றோல் 1 ரூபாவினாலும், பெற்றோல் ஒக்டேன் 95 ரக பெற்றோல் 2 ரூபாவினாலும், சுப்பர் டீசல் 2 ரூபாவினாலும் குறைக்கப்பட்டுள்ளது. ஒட்டோ டீசல் விலையில் மாற்றம் இல்லை எனவும் நிதியமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் விலைச்சூத்திரத்திற்கு அமைய, உலக சந்தையில் எரிபொருட்களின் விலைகள் குறைவடையும் நிலையில் அதன் பலன் மக்களுக்கு வழங்கப்படும் என வழங்கப்பட்ட உறுதிப்பாட்டுக்கு அமைய குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு விடுத்துள்ள அறிவித்தலில் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)

Post a Comment