Ads (728x90)

அடுத்த பொதுத் தேர்தல் தொடர்பில் சபாநாயகர் மற்றும் நாடாளுமன்றக் கட்சிகளின் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சிறப்பு அறிக்கை ஒன்றிலேயே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாடாளுமன்றின் அங்கீகாரத்துடன் நாடாளுமன்றைக் கலைத்து பொதுத் தேர்தலுக்குச் செல்ல பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, யோசனை ஒன்றை முன்வைத்துள்ளார்.

இதேவேளை எதிர்வரும் மார்ச் மாதத்தின் நடுப்பகுதிக்குப் பின்னரே ஜனாதிபதி நாடாளுமன்றைக் கலைக்க முடியும் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget