Ads (728x90)

ஜனாதிபதித் தேர்தலில் வடக்கு, கிழக்கு மக்கள் வாக்களிப்பின் மூலம், பிரத்தியேகமான செய்தி ஒன்றை புதிய ஜனாதிபதிக்குச் சொல்லி இருக்கின்றார்கள். அந்தச் செய்தியினை அல்லது அவர்கள் மூலம் வழங்கப்பட்டிருக்கின்ற ஆணையினை புதிய ஜனாதிபதி கருத்திற் கொண்டு செயற்படுவார் என்று நம்புகின்றோம் என இலங்கைத் தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் கி.துரைராசசிங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

 நடைபெற்று முடிந்த குறித்த இந்தத் தேர்வுக்கான ஜனாதிபதித் தேர்தலிலே வடக்கு, கிழக்கு மக்கள் குறிப்பாக நாங்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் அமோகமாக வாக்களித்திருக்கின்றார்கள்.

2015 ஆம் ஆண்டின் ஜனாதிபதித் தேர்தலில் அளிக்கப்பட்ட வாக்குகளை பின்தள்ளியவர்களாக வடக்கு, கிழக்கின் எல்லா மாவட்டங்களிலும் அதிகூடிய வாக்குகளை அளித்திருக்கின்றார்கள்.

இதற்காக எமது மக்களுக்கு எங்களுடைய நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்கள், எமது ஏனைய ஆதரவாளர்கள் உட்பட அவர்களால் நெறிப்படுத்தப்பட்ட எமது அருமை வாக்காளர்கள் எல்லோருக்கும் இந்த நன்றிகள் உரித்தாகட்டும்.

இனி நாட்டின் ஜனாதிபதி என்ற ரீதியிலே மக்களுடைய ஆணையை மதித்து புதிய ஜனாதிபதி அவர்கள் இந்த நாட்டின் சகல பாகங்களுக்கும் சுபீட்சம் அளிக்கும் வகையில் தனது செயற்பாடுகளை மேற்கொள்வார் என்ற நம்பிக்கையோடு, எமது மக்கள் சார்பில் நியமிக்கப்படவுள்ள ஜனாதிபதி அவர்களுக்கு எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம் என்று தெரிவித்துள்ளார்.



Post a Comment

Recent News

Recent Posts Widget