Ads (728x90)

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் 14 கட்சிகளிற்குமிடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை இன்று கைச்சாத்தாகியுள்ளது. இந்த சிறிய கட்சிகள் முன்னர் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பங்காளிகளாக இருந்த கட்சிகளாகும்.

இந்நிகழ்வில் பேசிய முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ், தமிழ் தேசிய கூட்டமைப்பின் 13 அம்ச கோரிக்கையை புதிய ஜனநாயகக் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச ஆதரிக்க ஒப்புக் கொண்டதாலேயே இலங்கை தமிழ் அரசு கட்சி அவரை ஆதரிக்க முடிவு செய்துள்ளது. இத்திட்டம் நாட்டிற்கு தீங்கு விளைவிக்கும் என்பதால் கோட்டபய ராஜபக்ஷ நிராகரித்தார்.

அகில இலங்கை தமிழர் மகாசபை, சிறி ரெலோ கட்சி, இலங்கை மக்கள் தேசியக் கட்சி, ஜனதா சேவகா கட்சி, ஐக்கிய மக்கள் கட்சி, இந்திய தேசியக் கட்சி, புதிய ஜனநாயக மக்கள் கட்சி, தேசபக்தி ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் கட்சி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி, ஜனநாயக சோசலிஸ்ட் கட்சி மற்றும் இஸ்லாமிய சோசலிச முன்னணி உள்ளிட்ட கட்சிகள் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டுள்ளன.

Post a Comment

Recent News

Recent Posts Widget