Ads (728x90)

சிறுபான்மையினர் தொடர்பில் சிலர் மேற்கொள்ளும் பிரசாரங்களுக்கு ஏமாறாமல், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தை பார்க்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றியபோது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடொன்றைப் பெற்றுக்கொடுப்பதுடன், ஒவ்வொரு இளைஞருக்கும் தொழில்வாய்ப்பு பெற்றுக்கொடுக்கப்படும்.
இதனூடாக வறுமையை நீக்க தாங்கள் முயற்சிப்பதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், மொட்டு சின்னத்திற்கு வாக்களித்து, எதிர்வரும் 17ஆம் திகதி கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோருவதாக மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget