கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள ஏனைய குளங்கள் அடைவு மட்டத்தை அடைந்துள்ள அதேவேளை கல்மடு குளம், பிரமந்தனாறுகுளம், குடமுருட்டிகுளம், வன்னுரிக்குளம், கனகாம்பிகை குளம் ஆகியன அடைவு மட்டத்தை அடைந்து வான் பாய ஆரம்பித்துள்ளதாகவும் நீர்பாசன திணைக்களம் தெரிவிக்கின்றது.
அக்கராயன் குளம் (25 அடி) 17.6 அடியாகவும், நாகபடுவான்குளம் (10அடி) 6.2 அடியாகவும், புதுமுறிப்பு குளம் (19அடி) 14.6 அடியாகவும் உயர்ந்துள்ளது. நேற்று மாலைவரை பாரிய மழைவீழ்ச்சி பதிவாகாத நிலையில் ஏற்கனவே பெய்த மழை நீரின் வருகை குளங்களில் காணப்படுவதாகவும் திணைக்களம் மேலும் தெரிவிக்கின்றது.
நீர் நிலைகள் மற்றும் வான் பாயும் பகுதிகளில் நீராடுதல், சிறுவர்கள் விளையாடுதல் உள்ளிட்டவற்றை தவிர்க்குமாறும், அவ்வாறான பகுதிகள் மற்றும் கழிவு நீர் வெளியேறும் ஆற்றுப்படுக்கைகளை அண்மித்துள்ள மக்கள் தொடர்ந்தும் அவதானத்துடன் செயற்படுமாறும் மாவட்ட இடர் முகாமைத்துவ நிலையம் தெரிவிக்கின்றது.

Post a Comment