Ads (728x90)

வடக்கு-கிழக்கு மாகாணங்களில் புதிய அரசாங்கம் அபிவிருத்தி திட்டங்களை நடைமுறைப்படுத்தினால் அதற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு பூரண ஒத்துழைப்பு வழங்கும் என கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.

பொறுப்புக் கூறல் விடயங்களில் இலங்கையின் புதிய அரசாங்கம் கொண்டுள்ள நிலைப்பாடுகள் மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பு கையாளவுள்ள காரணிகள் குறித்து தெரிவிக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் மேற்கண்டவாறு கூறினார்.

ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலை முன்னெடுக்க வேண்டும் என்ற பிரேரணையை நிறைவேற்றிய நாடுகளுடன் நாம் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளோம். இந்நகர்வு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நல்லதொரு முடிவை கொண்டுவரும் என எதிர்பார்ப்பதாகவும் அவர் இதன்போது கூறினார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget