Ads (728x90)

எட்டாவது பாராளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் இன்று காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

ஜனாதிபதிக்குள்ள அதிகாரங்களுக்கு அமைய அதி விசேட வர்த்தமானி மூலம் கடந்த 02ஆம் திகதி பாராளுமன்றத்தின் மூன்றாவது கூட்டத்தொடர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.

ஜனாதிபதிக்காக வீதியின் இருமருங்கிலும் இடம்பெறவிருந்த இராணுவ மரியாதை ஆகிய சம்பிரதாயங்கள், ஜனாதிபதியின் வேண்டுகோளுக்கு அமைய இடம்பெறாது என பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

வரவேற்பு நிகழ்வின் பின்னர் காலை 10 மணிக்கு பாராளுமன்றக் கூட்டத்தொடரின் தலைமை உரையை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆற்றவுள்ளார். அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை ஜனாதிபதி முன்வைக்கவுள்ளார். பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரையாற்றிய பின்னர் சபை அமர்வு தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்படும்.

இதேவேளை ஜனாதிபதி கொள்கை பிரகடன உரையை ஆற்றிய பின்னர் சபை ஒத்திவைக்கப்பட்டு பிற்பகல் 01 மணிக்கு மீண்டும் பாராளுமன்றம் கூடும். இதன்போது புதிய எதிர்க்கட்சித் தலைவராக சஜித் பிரேமதாச உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவுள்ளதாக பாராளுமன்ற படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget