முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை இன்னும் மூன்று மாதத்திற்குள் இயங்க ஆரம்பிக்கும் என கைத்தொழில், சிறு கைத்தொழில், அரசு முதலீட்டு ஊக்குவிப்பு அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காலை 10 மணிக்கு குறித்த தொழிற்சாலைக்கு சென்ற அமைச்சர் தொழிற்சாலையின் தற்போதைய நிலைமையை ஆய்வு செய்த பின்னர் இதனை தெரிவித்தார்.
பிரதேச மக்களுக்காக பல்வேறு சேவைகளை ஆற்றிய இந்த தொழிற்சாலை1983 ஆம் ஆண்டு மூடப்பட்டது. இதனை மீண்டும் இரண்டு மூன்று மாதங்களுக்குள் ஆரம்பிப்பதற்கு எங்களுடைய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இந்த தொழிற்சாலை ஆரம்பிக்கபடுவது என்பது இந்த பிரதேச மக்களினுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் செயற்பாடாகும். எதிர்வருகின்ற இரண்டு, மூன்று மாதங்களுக்குள் இந்த வேலைத் திட்டங்களை ஆரம்பித்து அதனுடைய முழுமையான சேவைகளை இந்த பிரதேசத்திற்கு வழங்குவதற்கு எதிர்பார்த்து இருக்கின்றோம்.
ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் இந்த புதிய அரசாங்கமானது கைத்தொழில் மற்றும் விவசாயங்களை ஊக்குவிப்பதற்கான அரசாங்கமாக இருக்கின்றது விசேடமாக வடகிழக்கில் குறிப்பிட்ட ஒரு காலமாக பாரிய பிரச்சினையாக இருக்கின்ற வேலை வாய்ப்பு பிரச்சினைக்கு ஒரு தீர்வாகவும் இது அமையும்.
இப்போது வடகிழக்கு மக்களினுடைய வாழ்வாதாரங்களை உயர்த்துவதற்கு வேலைவாய்ப்பற்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காக இந்த அரசாங்கம்நடவடிக்கை மேற்கொள்ளுகிறது. எனவே மக்கள் எம்முடன் இணைந்து செயற்படுமாறு கோருகிறேன் என்றார்.
Subscribe to:
Post Comments (Atom)
Post a Comment