Ads (728x90)

யாழ்.போதனா வைத்தியசாலையில் மிக நீண்டகாலமாக MRI (Magnetic Resonance Imaging) எம்.ஆர்.ஐ.ஸ்கானர் இயந்திரம் இல்லாமையினால் நோயாளா்கள் பல்வேறு சிரமங்களை எதிா்கொண்டனர்.

வடமாகாணத்தில் எந்தவொரு அரச வைத்தியசாலையிலும் அந்த இயந்திரம் இல்லாத நிலமையும் காணப்பட்டது. இதனால் நோயாளா்கள் அனுராதபுரம் சென்று தமது தேவைகளை நிவா்த்தி செய்ய வேண்டியிருந்தது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு சிமென்ஸ் நிறுவனத்தின் முதல்தர எம்.ஆர்.ஐ.ஸ்கானர் இயந்திரம் கிடைத்துள்ளது. வைத்தியசாலையில் எம்.ஆர்.ஐ.ஸ்கானர் இயந்திரம் பொருத்தப்பட்டு இயக்குவது குறித்தான பரீட்சார்த்த செயற்பாடு நடைபெற்று வருகின்றது.

கடந்த ஆட்சியில் முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்தின அமைச்சரவைக்கு முன்வைத்த கோரிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய நிலையில் தற்போது இந்த MRI இயந்திரம் கிடைத்துள்ளது. 1.65 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இது கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை இரண்டு வருடங்களின் பின்னர் 5 வருடத்திற்கு பராமரிக்க 2,96,231 அமெரிக்க டொலர்களுக்கு சேவை மற்றும் பராமரிப்பு ஒப்பந்தமும் செய்யப்படவுள்ளது. விரைவில் நோயாளர்கள் எந்த சிரமுமின்றி யாழ்.போதனா வைத்தியசாலையில் MRI Scan செய்து கொள்ளமுடியும்.


Post a Comment

Recent News

Recent Posts Widget