Ads (728x90)

திருக்கேதீஸ்வரத்தை புனித பூமி யாக மாற்றுவதற்கு எந்தவித எதிர்ப்பும் இன்றி மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக இந்து, பௌத்த ஒற்றுமைக்கான அமைப்பின் செயலாளர் சி.மோகன் தெரிவித்துள்ளார்.

இந்து, பௌத்த ஒற்றுமையை வலியுறுத்தி சர்வதேச மாநாடு நேற்று யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியொன்றில் இடம்பெற்றது. குறித்த மாநாடு தொடர்பான தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சி.மோகன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய பாரம்பரிய, பொருளாதார, கல்வி, காணி மற்றும் இன பிரச்சினைகளை அரசியலுக்கு அப்பால் இந்து, பௌத்த பீடங்களை சேர்ந்தவர்கள் ஒரு தீர்க்கமான முடிவுக்கு வரவேண்டும் எனவும் மாநாட்டில் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சி.மோகன் மேலும் தெரிவித்துள்ளார்.             

Post a Comment

Recent News

Recent Posts Widget