Ads (728x90)

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானதாக சந்தேகிக்கப்படும் இருவர் அங்கொடையிலுள்ள தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒரு சீன பெண் உள்ளிட்ட இருவரே இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வைரஸ் தொற்று தொடர்பில் உறுதிப்படுத்த, அவர்களது இரத்த மாதிரிகள் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரேனா வைரஸ் தொற்றிலிருந்து பாதுகாப்பு பெற உலக சுகாதார நிறுவனம் ஒரு சில ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

சீனாவில் 41 பேர் இந்நோய்த் தொற்றினால் உயிரிழந்துள்ளதோடு, 1,287 பேர் இத்தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget