Ads (728x90)

தீவிரமாகப் பரவி வரும் கொரோனா வைரஸினால் உலகளாவிய ரீதியில் 18 மாதங்களுக்குள் 65 மில்லியன் மக்கள் உயிரிழக்கும் அபாயமுள்ளதாக அமெரிக்காவின் ஜோன் ஹோப்கின்ஸ் மருத்துவ ஆய்வுப் பிரிவினால்  எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இந்த வைரஸ் பரவுவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்னர் ஜோன் ஹோப்கின்ஸ் மருத்துவ ஆய்வுப் பிரிவு இது குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தது.

சீனாவின் வுஹான் நகரில் முதலில் பதிவான கொரோனா வைரஸ், அமெரிக்கா, பிரான்ஸ், பிரித்தானியா, அவுஸ்ரேலியா, நேபாளம், தாய்லாந்து, ஜப்பான், வட கொரியா, தாய்வான், சிங்கப்பூர், வியட்னாம் உள்ளிட்ட 11 நாடுகளில் தற்போது பரவியுள்ளது.

வைரஸ் தாக்கத்தினால் சீனாவில் மட்டும் இதுவரை 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதேவேளை கொரோனா வைரஸ் முதலில் பதிவான வுஹானில் வைத்தியர் ஒருவரும் உயிரிழந்துள்ளதாக சீன தகவல்கள் தெரிவிக்கின்றன.

சீனாவிலுள்ள இலங்கையர்கள் தொடர்பில் தொடர்ந்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக சீனாவிலுள்ள இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

சீனாவின் வுஹான் நகரில் உள்ள இலங்கை மாணவர்களை உடனடியாக நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகியதாக சந்தேகிக்கப்படும் சீன பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் தேசிய தொற்றுநோய் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Post a Comment

Recent News

Recent Posts Widget