Ads (728x90)

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பப்படிவங்களை ஒப்படைத்து, 04 மணிநேரத்திற்குள் அடையாள அட்டைகளை வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டை பெற்றுக் கொள்வதற்காக விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரிகளுக்கு அவர்களது தேசிய அடையாள அட்டைகள் தயாரானதும் விண்ணப்பதாரியின் கையடயக்கத் தொலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆட்பதிவுத் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் வியானி குணதிலக தெரிவித்தார்.

ஒருநாள் சேவையின் கீழ் தேசிய அடையாள அட்டைகளை பெற்றுக் கொள்வதற்காக நாளொன்றுக்கு 1,500 பேருக்கும் அதிகமானோர் கொழும்பு அலுவலகத்திற்கு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

Recent News

Recent Posts Widget