Ads (728x90)

ஊழியர் சேமலாப நிதியத்தின் (EPF) அங்கத்தவர்களுக்கு தமது மாதாந்த பங்களிப்பு பணம் கணக்கில் சேர்க்கப்படுவது தொடர்பாக உடனடியாக அறியத்தரும் கையடக்க தொலைபேசி குறுஞ்செய்தி தகவல் சேவை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

நேற்று முன்தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் தினேஷ் குணவர்தனவினால் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. ஊழியர் சேமலாப நிதியம் 2.6 மில்லியன் அங்கத்தவர்களை கொண்டுள்ளது.

தற்பொழுது உள்ள நடைமுறைக்கு அமைவாக ஊழியர் சேமலாப நிதியத்தின் அங்கத்தவர்கள் தமது பங்களிப்பு தொகையானது, நிதியத்தின் கணக்கில் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை அறிந்துகொள்ள 06-12 மாத காலங்கள் செல்கின்றது.

இதனால் ஊழியர் சேமலாப நிதிய அங்கத்தவர்கள் தமது மாதாந்த பங்களிப்பு தொகை தமது கணக்கில் வைப்பீடு செய்யப்பட்டுள்ளதை அவர்களால் உறுதி செய்யக்கூடிய வகையில், குறித்த தொகை கணக்கில் சேர்க்கப்பட்டதை அங்கத்தவர்களால் வழங்கப்படும் கையடக்க தொலைபேசிக்கு குறுஞ் செய்தியின் மூலம் அறிவிக்கும் சேவை ஒன்றை ஆரம்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Post a Comment

Recent News

Recent Posts Widget