Ads (728x90)

வாகன சாரதிக்காக விண்ணப்பிக்கும் ஒருவர் தமது விண்ணப்பம், மருத்துவ சான்றிதழை சமர்ப்பித்த பின்னர் மூன்று மணித்தியாலங்களில் சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ள முடியும் என போக்குவரத்துத்துறை இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

யாரும் தமது நேரங்களை வீணடிக்கக் கூடாது என்ற நோக்கிலேயே அனுமதிப் பத்திரங்களை பெற்றுக் கொள்ள ஏற்கெனவே இருந்த டோக்கன் முறை மாற்றப்பட்டு இணையத்தின் ஊடாக மருத்துவம் மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களுக்கான முன் அனுமதி பெறப்படும் முறை தற்போது செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

Recent News

Recent Posts Widget